India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2, 2ஏ தேர்விற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 45 தேர்வு மையங்களில் 65 அறைகளில் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. இதில், 13,965 பேர் தேர்வு எழுதினர். மீதம், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 17ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Tasmac Shops) உள்ள FL1, FL2, FL3, மற்றும் FL3A, FL4A ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில், அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ளது. 2007இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், கடந்த ஜூன் மாதம் சி.ஐ.டி.யூ சார்பில் சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரக் கடிதம் கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகியபோது, ஏராளமான பிரச்னைகள் வந்ததாலேயே போராட்டம் நடத்துவதாக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறினார்.
பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாளான நாளை (செப்.15) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மாலையிட்டு மரியாதை செலுத்த உள்ளார். மேலும், அவருடன் அக்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் வந்து பங்கு கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, வரும் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெறும். வரும் 18ஆம் தேதி சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும், தொழிற்சங்க பதிவு குறித்து நீதிமன்றத்தையும் நாட உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சௌந்தராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் இணை மானியத் திட்டத்தின் கீழ் மானியக்கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோா் வரும் செப். 19-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667746682 எண்களில் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு லோக் அதாலத் நடைபெறவுள்ளது. இதில், நிலுவையில் உள்ள நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காணப்படும். சமாதானமாக போகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன் மனைவி பிரச்னை, ஜீவனாம்சம், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்மந்தப்பட்ட நேரடி வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
குரூப் -2 மற்றும் குரூப்- 2ஏ தேர்வு இன்று (செப்.14) தமிழகம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுதும் 8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,943 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 45 மையங்களில், 65 ஹால்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை கண்காணிக்க, 16 மொபைல் டீம், நான்கு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.