Kanchipuram

News September 28, 2024

அண்ணா நினைவு இல்லத்தில் கையெழுத்திட்ட முதல்வர்

image

திமுக பவள விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மாநில உரிமைகளை மீட்க அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் அயிராமல் உழைப்பேன் என குறிப்பிடில் கையெழுத்திட்டார்.

News September 28, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (செப். 28) வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, காஞ்சிபுரத்தில் இன்று கனமழை செய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 28, 2024

போலீஸ் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

image

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அருகே, தி.மு.க.,வின் பவள விழா இன்று (செப்.28) நடைபெற உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால், எஸ்.பி.சண்முகம் தலைமையில், நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

News September 28, 2024

காஞ்சிபுரத்திற்கு முதல்வர் வருகை

image

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) வரவுள்ளதையொட்டி, காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறை கூறியுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகருக்குள் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையான கீழம்பி, வெள்ளைகேட் வழியாகச் செல்லவும்.

News September 28, 2024

திமுக பவள விழா மாபெரும் பொதுக் கூட்டம்

image

திமுக பவள விழாவையொட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கும் மாபெரும் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று 28ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். “நமது உரிமை” “நமது கடமை” என்ற அந்த உணர்வோடு நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்
தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 27, 2024

மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடுதல்

image

காந்தி ஜெயந்தி தினம் வரும் 02.10.2024 (புதன் கிழமை) அனுசரிக்கப்படவுள்ளது. எனவே, மேற்படி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A மற்றும் FL4A ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

ஒரே இரவில் 7 பைக்குகள் திருட்டு: எஸ்.பி.யிடம் கோரிக்கை

image

ஒரகடத்தில் லாரி, பேருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் இருசக்கர வாகனங்களை ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள்கோவில் சர்வீஸ் சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இங்கு கடந்த 16ஆம் தேதி இரவு ஒரே நாளில் 7 இருசக்கர வாகனங்கள் திருடு போனது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி காஞ்சிபுரம் எஸ்.பியிடம் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 27, 2024

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி நாளான வரும் அக்.2ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 27, 2024

தமிழறிஞர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News September 27, 2024

நவ. 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான சம்பா ரபி பருவ விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு 518 ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!