Kanchipuram

News October 19, 2024

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ந்த பெண் வீராங்கனை

image

காஞ்சிபுரம், புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிக் பாக்ஸிங் பயிற்சிகளை பெற்றுள்ளார். இவர் அக். 6ம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை கம்போடியா நாட்டில் நடைபெற்ற வாக்கோ ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக சார்பில் பங்கேற்றார். இதில் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

News October 18, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 18, 2024

சாம்சங் தொழிற்சாலை சங்கம் வழக்கு

image

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்வதை மறுத்து வந்த தமிழக தொழிலாளர் துறைக்கு எதிராக, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று 34ஆவது வழக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நடைபெற்ற நிலையில், சி.ஐ.டி.யூ. வழக்கு வரும் 22ஆம் தேதி பிற்பகலில் எடுத்துக் கொள்வதாக நமது வழக்கறிஞர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News October 18, 2024

வெள்ள கண்காணிப்பு அறை திறப்பு: கலெக்டர் தகவல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று வெளியிட்ட செய்தியில், “காஞ்சிபுரத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்திருப்பதுடன் வெள்ள கண்காணிப்பு அறையும் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

News October 18, 2024

தேர்வர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி

image

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை (அக்.19, 20 தவிர) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் அரசு சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 18, 2024

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.18) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 18, 2024

500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில், தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இக்கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, இதன் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2024

மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மழை குறைந்த நிலையில் இன்று (அக்.18) காலை 6.50 மணி அளவில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடை எடுத்துச் சொல்லுங்க.

error: Content is protected !!