Kanchipuram

News October 1, 2024

காஞ்சி மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நாளை (அக்.2) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளன. இதில் துாய்மையான குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

News October 1, 2024

கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் பெண் தர்ணா

image

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கு வெளியே, காவித்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி(60) என்ற பெண் பெட்ரோல் பாட்டிலுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தடுத்து விசாரித்த போது, மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்த தங்களுக்கு பட்டா வழங்கியும் ஊர் தலைவர் வீடு கட்ட அனுமதிப்பதில்லை என குற்றம்சாட்டினார். இதுகுறித்து, தாசில்தார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறிதியளித்த பின்னர் அங்கிருந்து சென்றார்.

News October 1, 2024

காஞ்சிபுரத்தில் சாலை மறியிலில் ஈடுபட முயன்றவர்கள் கைது

image

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சாம்சங் தொழிலாளர்கள், சிஐடியு சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு, 8 மணி நேர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், இன்று காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

News October 1, 2024

வேன் மீது லாரி மோதி விபத்து: நொறுங்கிய வாகனம்

image

பீகாரைச் சேர்ந்த ஹரி காந்தராய்(42), ஒரகடத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, ஒரகடத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வேனில் புறப்பட்ட இவர், பனப்பாக்கம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, லாரி ஒன்று வேன் மீது மோதியது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் உயிர்சேதம் இல்லை. இதனால் கடு , கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News October 1, 2024

படப்பை அருகே டாரஸ் லாரி மோதி முதியவர் பலி

image

படப்பை அடுத்த வஞ்சிவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). இவர், அதேப் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 21.50 மணிக்கு பணி முடித்துவிட்டு, அதேப் பகுதியில் உள்ள சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 1, 2024

முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க கடன்பெற அழைப்பு

image

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள், முன்னாள் படை வீரர்கள் முன்னாள் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். மேலும் விவரங்களை அறிய 044-22262023 என்ற எண்ணில் அழைக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.

News October 1, 2024

காஞ்சியில் இன்று சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

image

சிஐடியு தொழிற்சங்கம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை மற்றும் எஸ்எஸ் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சாலை சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று 19ஆவது நாளாக நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது.

News October 1, 2024

ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் முடிவுகள்

image

வாலாஜாபாத் வட்டம் நத்தநல்லூர் கிராமம் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பெ. தனபால் என்பவர் வில் அம்பு சின்னத்தில் வெற்றி பெற்றார். 188 ஓட்டுகளில் 117 ஓட்டுகள் பெற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News September 30, 2024

451 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.09.2024) ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 451 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

News September 30, 2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொண்டார்.

error: Content is protected !!