Kanchipuram

News October 2, 2024

சிறுவனை அடித்துக் கொலை செய்த நபர் கைது

image

ஓரிக்கை, தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(34). காஞ்சிபுரம் சர்வே துறை ஆய்வாளரான இவருக்கு, அப்பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த 30 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்ணின் இரு குழந்தைகளை கடந்த செப்.28இல் தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதில் உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் ராஜேஷை நேற்று கைது செய்தனர்.

News October 2, 2024

ஒரே நாளில் சாம்சங் தொழிலாளர்கள் 900 பேர் கைது

image

சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேரடியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 900 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

News October 2, 2024

காஞ்சிபுரத்தில் இஞ்சி ரூ.60க்கு விற்பனை

image

தமிழகத்தில் விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும் இஞ்சி அதிகளவு பயிரிடப்படுகிறது. காஞ்சிபுரம் சந்தைகளில் இரு மாதங்களுக்கு முன், 1 கிலோ இஞ்சி அதிகபட்சமாக ரூ.250 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விழுப்புரத்தில் இஞ்சி அறுவடை தொடங்கி, வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரத்தில் 1 கிலோ இஞ்சி ரூ.60க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

News October 2, 2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள், கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதால், பொதுமக்கள் அவரவரே பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News October 2, 2024

மயில்தோகை அலங்காரத்தில் காட்சியளித்த முருகன்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உள்ள வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி, உற்சவமூர்த்தியான முருகர் வள்ளி தெய்வானையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில் தோகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News October 2, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை

image

பெரிய கொளுத்துவான்சேரி, அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்த நிக்கில் ஜான்(35), சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News October 2, 2024

முன்னாள் அமைச்சருடன் அதிமுக நிர்வாகி சந்திப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாநகர கிழக்கு பகுதி செயலாளரும், காஞ்சிபுரம் நகர வங்கியின் முன்னாள் தலைவருமான பாலாஜி, அவரது பிறந்தநாளை ஒட்டி, அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன் காஞ்சிபுரம் அதிமுக மாநகர நிர்வாகிகள் இருந்தனர்.

News October 1, 2024

ஏகாம்பரநாதர் கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

image

காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் உற்சவ சிலையான 1000 ஆண்டு பழமையான சோமஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்த நிலையில், அதனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

News October 1, 2024

காஞ்சி போராட்டத்திற்கு ஆதாரவாக திருப்பூரில் போராட்டம்

image

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூரில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் செல்போன்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

News October 1, 2024

உத்திரமேரூர் ஏரிகளுக்கான தலைவர் சங்க தேர்தல்

image

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் சார்ந்து, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 92 ஏரிகளில் 80 ஏரிகளுக்கான சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்தும், மீதமுள்ள 12 ஏரிகளுக்கான சங்க தேர்தல் நேற்று போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.

error: Content is protected !!