India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை அரசு பேருந்து பயணத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று துவங்கி வைத்தார். இந்த பேருந்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தனி வழியாக திருப்பதி செல்லும். இந்த நிகழ்வின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி 23.10.2024 தேதி உத்திரமேரூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 வரை மணிக்கு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கலாம் என தெரவித்துள்ளார்.
2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, முதலமைச்சர் மாநில விருதுகளை வழங்க உள்ளார். 10 வகையான விருதுகளுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விருதுகளை பெற விண்ணப்பதாரர்கள் 25.10.2024க்குள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீகப் பயணமாக வாரணவாசி சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பங்கேற்ற்போது, அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் மடாதிபதியுடன் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிரதமருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான இலவச திருமணங்கள் இன்று நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற குமரக்கோட்டம் திருக்கோயிலில் 3 திருமணங்களும் என மொத்தம் 11 திருமணங்கள் காலை 6 மணியிலிருந்து 7.30 நடைபெறுகிறது.
வரதராஜபுரத்தைச் சேர்ந்த சுதர்சனா(31) வீட்டில் மணிமங்கலத்தைச் சேர்ந்த ஜோதிமணி (50) வீட்டு வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த 18 சவரனை நகை திருடி கொண்டு ஜோதிமணி தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணிமங்கலத்தில் இருந்த அவரை சுதர்சனா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஜோதிமணியிடமிருந்து 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து, ஆரியபெரும்பாக்கம், சமத்துவபுரம், துலங்கும் தண்டலம், திம்மசமுத்திரம் வழியாக காஞ்சிபுரம் அரசு பேருந்து ‘T10’ பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து, தினசரி 3 நடைகள் இயங்கப்பட்டன. கொரோனாவிற்குப் பின் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்குமாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து?
மாவட்ட அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சை அளிக்கும் முறைகள், நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் 23 வகையான சிகிச்சை முறைகள், மொத்தம் 765 படுக்கைகள், 70 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, சுகாதாரத் துறை அளிக்கும் தர வரிசை பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 10 மாதங்களாகவே முதல் இடத்தில் தொடர்கிறது.
Sorry, no posts matched your criteria.