India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில், செப்டம்பர் மாதத்தோடு தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், நடப்பாண்டில் இயல்பைவிட 35% மழைப்பதிவு கூடுதலாக பதிவாகியுள்ளது. அதாவது, காஞ்சிபுரத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை 47.2 செ.மீ. மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால், 35% கூடுதலாக பெய்து 63.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக மழை பெய்திருப்பதால் காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் 15.10.2024க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உத்திரமேரூர் அருகே குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான லோகநாதன், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 3 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து, ஜனாதிபதியிடம் விருது வாங்கினார். இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்று, ஊருக்கு திரும்பிய லோகநாதனுக்கு, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடிகர் சரவணன், மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்து பிரசாதங்களை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஒன்றியம் காலூர் ஊராட்சியில் விலிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இன்று (03.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
கீழம்பி, அமராவதிபட்டிணத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(32). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் ஒலிமுகமதுபேட்டையில் இருந்து கீழம்பி நோக்கி தனது ஜாவா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில், மோகன்ராஜ் உயிரிழந்தார். பாலுச்செட்டிசத்திரம் போலீசார் மோகன்ராஜ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
தமிழ் அறிஞர்கள் அரசு உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchiththut.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வரும் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம்.
பெரிய பனிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(36). இவர், கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திவாகர்(35), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த திவாகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷின் காதில் வெட்டியதில், பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனார்.
வரதராஜபுரம் ஊராட்சியில் இன்று (02.10.2024) அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் உடன் இருந்தனர்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை., மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா பல்கலையில் நேற்று நடந்தது. இதில், பல்கலை., துணைவேந்தர் சீனிவாசு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.