India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து கைத்தறி துறை சார்பில், சிறந்த நெசவாளர் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களுக்காக சான்றிதழ் மற்றும் காசோலையினை பெற்ற நெசவாளர்கள் இன்று (04.10.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் கைத்தறி துறை துணை இயக்குநர் ச.மணிமுத்து உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய மைய கூட்டரங்கில், ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, கருவூல அலுவலர் அருண்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணை இயக்குனர் உணவு மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், இன்று காலை நடிகர் சரவணன் வருகைதந்து மூலவர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டார். பிறகு ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு கலை பண்பாட்டு துறையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இசைப்பள்ளி தலைமையாசிரியர் ரமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி தவறிய இசை ஆர்வம் உள்ள மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-2023 ஆகிய இரு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, புத்தக திருவிழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக 2024ஆம் ஆண்டிலும் புத்தக திருவிழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப வரும் டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறை காலத்தில் புத்தக திருவிழா நடத்த மாவட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று, பசுமை விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏகனாபுரத்தில் 800ஆவது நாளாக போராட்டம் நடத்தினர். மேலும், விமான நிலையம் வேண்டாம் என 9ஆவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தொடர் போராட்டத்திற்கு, திரைப்பட இயக்குநர் கௌதமன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 2015ஆம் ஆண்டில் செய்யப்பட்ட உற்சவர் சிலையில் மோசடி நடந்ததால், அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். 2017ஆம் ஆண்டில், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்திற்கு வந்த இவ்வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. எனவே, விரைவில் விசாரணை தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உரிமம் பெற கடை அமையும் இடத்தின் வரைபடம் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்கள் வாயிலாக இணையவழியில் வரும் அக்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின், விசாரணைக்குட்படுத்தப்பட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் தற்காலிக உரிமத்தின் உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை ஒருசில வியாபாரிகள் வாங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும், புகார் கொடுத்தால் உடனடியாக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.