India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.4 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில், படப்பை வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் அவரது மனைவியும், திமுக பெண் மாவட்ட கவுன்சிலருமான ராஜலட்சுமி, தாய் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்மையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுதுகள் அமைப்பு மற்றும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் இயங்கும் ‘முத்து இயன்முறை’ மருத்துவமனையில் வரும் 27ஆம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடத்த உள்ளனர். இதில், ரத்த தானம் அளித்த பிற உயிர்களை காக்க வழி வகுக்கலாம் என விழுதுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரத்த தானம் செலுத்துவது மிகவும் நல்லது. ஷேர் பண்ணுங்க
தீபாவளி பண்டிகை அக் 31ஆம் தேதி கொண்டாடப்படுவதால், மறுநாள் நவ 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளித்தும், கிராமசபை கூட்டங்களை நடத்தவும் அறிவித்துள்ளது. விடுமுறை தினமான அன்றைய தினம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளதால், காஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமசபை கூட்டத்தை, வேறு தேதியில் நடத்த வேண்டுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வாரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால், 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சாம்சங் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு:
*ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் காலை 7:30 மணிக்கு. *இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. *வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவிலில் காலை 7 மணிக்கு. வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணிக்கு. சோதிபுரீஸ்வரர் கோவலில் காலை 7 மணிக்கு.
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை – பெரியார் நகர் புறவழி சாலை பகுதியில் தேனம்பாக்கம், விஷ்ணு நகர் என்ற பகுதியில் அரசு மதுபான கடை எண் 4155 கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஏங்கி வந்த நிலையில் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்க பணிகள் அரசு துவங்கி உள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் வயல்வெளியில் இருக்கும் கிணறு மற்றும் மோட்டார் ஆழ்துளை கிணறு போன்றவை கணக்கெடுக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகளும் வருவாய் துறைகளும் செய்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, நேரடியாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரக் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்க 96777 36557 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.180 கோடியில் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. வல்லம், வடகாலில் உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 5,203 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக 431 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.