India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொது வினியோக திட்டத்தின் கீழ், மாதந்தோறும் கிராமம் வாரியாக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள சிங்காடிவாக்கம் கிராமத்திலும், உத்திரமேரூரில் உள்ள மலையாங்குளம் கிராமத்திலும், வாலாஜாபாத்தில் உள்ள ஊத்துக்காடு கிராமத்திலும், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள காட்ராம்பாக்கத்திலும், குன்றத்துாரில் உள்ள படப்பையிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
காஞ்சிபுரம் போலீசார் நேற்று படுநெல்லி, வளத்தீஸ்வரர் தோட்டத்தெரு, திம்மசமுத்திரம், செவிலிமேடு, ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருட்கள் விற்றதாக, புஷ்பராஜ் (28), சுரேஷ் (53), அன்பரசு (50), ஹரிஷ் (20), ஜெயக்குமார் (20), தாமோதரன் (20), ஜகதீஸ்வரன் (29), ரித்திக்ராஜ் (19), ஒடிசாவைச் சேர்ந்த சித்தார்த் குமார் பெஹரா (27) ஆகிய 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 71ஆவது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறுகிறது. பெரிய காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள குஜராத்தி திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த முகாமில், பங்கேற்க விரும்புவோர் 97914 08768, 95438 81888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. இதில், 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 175 நபர்களில், 51 பேருக்கு தனியார் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், 24 பேருக்கு 2ஆம் கட்ட நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில், ஒமேகா சி.பி.எஸ்.சி. பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் மாணவிகள், அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கோ-கோ விளையாட்டில் கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அளவில் காஞ்சிபுரம் மாணவிகள் வெற்றிபெற்றது மிகப்பெரிய பெருமை ஆகும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (அக்.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காஞ்சிபுரத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, சங்குசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சதாவரம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஐயம்பேட்டை, காந்தி சாலை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம், புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பிக் பாக்ஸிங் பயிற்சிகளை பெற்றுள்ளார். இவர் அக். 6ம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை கம்போடியா நாட்டில் நடைபெற்ற வாக்கோ ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் தமிழக சார்பில் பங்கேற்றார். இதில் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்று காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.