India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை – பெரியார் நகர் புறவழி சாலை பகுதியில் தேனம்பாக்கம், விஷ்ணு நகர் என்ற பகுதியில் அரசு மதுபான கடை எண் 4155 கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஏங்கி வந்த நிலையில் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அக்கடை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்க பணிகள் அரசு துவங்கி உள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் வயல்வெளியில் இருக்கும் கிணறு மற்றும் மோட்டார் ஆழ்துளை கிணறு போன்றவை கணக்கெடுக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகளும் வருவாய் துறைகளும் செய்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, நேரடியாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரக் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்க 96777 36557 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.180 கோடியில் இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. வல்லம், வடகாலில் உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 5,203 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக 431 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது, ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில், திமுக இளைஞரணி மாவட்ட, மாநில, அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் இன்று (அக்.22) நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுடன் உரையாடினர். அப்போது, சட்டமன்ற தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை வங்க கடலில் உருவானது. இதன் காரணமாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் நீக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், பல்லாவரம், செம்பாக்கம், மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை, ஆலந்தூர், போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பட்டாசு கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில், நாளை முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. பட்டாசு விற்பனையில், முறைகேடுகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பரந்துார், நாகப்பட்டு துணை கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மேல் மூடி இல்லாத அந்த தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த 13 பேர், வயிற்றுப்போக்கு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேற்று, நாகப்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்தனர். கிராம மக்களுக்கு வயிற்றுப்போக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
ஒரடகம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ஏற்கனவே 7 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இதற்காக, திருப்புலிவனம் கிராமத்தை சுற்றி புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தேவையான அடிப்படை விபரங்களை வருவாய் துறையினர் சேகரிக்க தொடங்கியுள்ளனர்
Sorry, no posts matched your criteria.