Kanchipuram

News November 17, 2024

அலுவலகம் இல்லாததால் நெசவாளர்கள் அவதி

image

காஞ்சியிலும் அய்யம்பேட்டையிலும் உள்ள நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது குறைகளை பூர்த்தி செய்ய சென்னை அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளதாகவும், மழைக்காலங்களில் நெசவு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், ஊக்கத்தொகைகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய காஞ்சி ஜவுளி மற்றும் நூல் துறை அலுவலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 17, 2024

பரந்தூர் விவசாயிகள் இரவு நேரத்தில் தொடர் போராட்டம்

image

ஏகனாபுரம் கோயில் அருகே பசுமை விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘பசுமை விமான நிலையத்திற்கு விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை வழங்க மாட்டோம்’ என்ற கோஷங்களை எழுப்பினர்.

News November 16, 2024

எலி மருந்தால் 2 உயிரிழப்பு; நிறுவனத்தின் உரிமம் ரத்து

image

குன்றத்தூரில் எலி தொல்லை காரணமாக தனியார் நிறுவனம் மூலம் வீட்டில் எலி மருந்து அடித்த விவகாரத்தில் 2 குழந்தைகள் பலியானார்கள். கணவன், மனைவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீட்டிற்கு வந்து எலிமருந்து அடித்துவிட்டு சென்ற ஊழியரை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள கோவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமினை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஜ.சரவணக்கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 16, 2024

12 இடங்களில் வைக்கப்பட்ட எலி மருந்தால் ஏற்பட்ட துயரம்

image

குன்றத்துார், மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவரது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த பெஸ்ட் கன்ட்ரோலர் எனும் நிறுவனம் மூலம் வாங்கிய மருந்தில் வெளியேறிய நெடிகளால் அவரது மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். தற்போது கிரிதரன், அவரது மனைவி பவித்ரா சிகிச்சை பெறுகின்றனர். 3 இடங்கள் மட்டுமே வைக்க வேண்டிய மருந்தை 12 இடங்களில் வைத்ததால் இந்த துயரம் ஏற்பட்டது தெரியவந்தது.

News November 16, 2024

புதிய வாக்காளர் படிவ விவரம்: பதிவு செய்யும் முறைகள்

image

வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்.

News November 16, 2024

நடைமுறைக்கு வந்த ஸ்கேன் திட்டம்: மதுபிரியர்கள் மகிழ்ச்சி

image

தமிழகத்தில் அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட, கூடுதல் விலைக்கு மது விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க, கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்புவது முதல் கடையில் விற்பது வரை மது விற்பனையை முழுக் கணினி மயமாக்கும் திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 210 கடைகளில் மது பாட்டிலை ‘ஸ்கேன்’ செய்து விற்கும் கணினிமய திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

News November 16, 2024

வாக்காளர் பட்டியலில் மாற்றமா? சேர்க்கணுமா?

image

18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.

News November 16, 2024

காஞ்சிபுரத்தில் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடிகளிலும் இன்று முதல் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இரட்டை பதிவுகளை நீக்கலாம். பெயர் சேர்த்தல் (Form 6), இடமாற்றம் (Form 7), தொகுதி மாற்றம் மற்றும் அடையாள அட்டை நகல் (Form 8) ஆகியவற்றை பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் திருத்தங்களை செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News November 16, 2024

காஞ்சிபுரம் கபடி வீரர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகம் சார்பில், வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை (நவ.17) கொளப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில், கலந்து கொள்ளும் வீரர்கள் 20 வயதுக்கு உட்பட்டும் 70 கிலோவிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கபடி போட்டியில் கலந்து கொள்வார்கள். வீரர்களின் கபடி குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

error: Content is protected !!