India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக இரவு பகலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவோ, அருவி அருகில் விளையாடவோ அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 70 விற்பனையாளர் பணியிடங்களில் நேரடியாக நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே நவ.7ஆம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், இன்று காலை 10 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள், மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபர் சொந்த நூலகங்களுக்கு விருது 2024-2025ம் ஆண்டு நடைபெற்றயுள்ள புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது. தங்கள் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்கள் குறித்த விபரங்களை தெரிவித்து பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். அப்பொழுது அந்த கார் மலையனூர் என்ற இடத்தில் அருகே வரும்பொழுது அருகில் உள்ள பாசன வாய்க்கால் பகுதியில் நிலைத்தடுமாறி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கு எந்த காயமும் இல்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்படவில்லை எனில் தங்கள் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் அணுகி தங்களை உறுப்பினர்களாக சேர்த்து திட்டங்களை பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
TN-Alert கைப்பேசி செயலி, பொதுமக்கள் வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது.இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும் கூகுள் பிளே ஸ்டோரில் tn-Alert பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை மீண்டும் நியமனம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி , சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக தமிழரசன் என்பவரை மீண்டும் நியமனம் செய்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று உத்தரவிட்டு அறிக்கை வெளியீட்டுள்ளார். இவருக்கு பாமக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.