India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். அப்போது பேசிய கலெக்டர், மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக உரிய நேரங்களில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி சைக்கிள் போட்டியில் நடைபெறுகிறது. இதில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 10 கிலோமீட்டர், 15 வயதிற்கு உட்பட்டவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் சைக்கிள் ஓட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 28) காய்கறி விலை. தக்காளி ரூ.28, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,.முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகள் உள்ளதாகவும், அந்த கால்நடைகளுக்கு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் இரண்டு லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.
சின்னசேலம் அருகே திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா நேற்று மாலை அருகில் உள்ள பால் நிலையத்தில் பால் கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சோள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதில் டிஎஸ்பி தேவராஜ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் நான்கு தனிப்படைகள் அமைக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சவுதி அரேபியா அமைச்சகத்தில் அலோபதி மருத்துவம் படித்த முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாயிலாக சவுதி அரேபியா அமைச்சகத்தில் மருத்துவர் பணியிடங்களுக்கு www.omcmanpower.tn.gov.in மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், 63791 79200 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பவர் ஆபீஸ் அருகில் இயங்கி வரும் பாரதி மெட்ரிக் பள்ளி பேருந்து இன்று பனையாந்தூர் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. விபத்தில் பள்ளிக்குச் சென்ற ஏழு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை தனியார் பள்ளிகளில் இயங்கக்கூடாது என்று சொல்லியும் வகுப்புகள் நடந்துள்ளது. இன்று காலை 8:30 மணி அளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு திட்டம் ஆறாவது சுற்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பத்தாண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றிய பொருளாதார அறிஞர் மன்மோகன்சிங் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைகின்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களில் ஒருவராக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.