Kallakurichi

News November 20, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம்: இபிஎஸ் வரவேற்பு

image

அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 20, 2024

கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சி அருகே விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரித்து வந்துள்ளது.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உத்தரவிட்டனர்.மேலும், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இன்று தீர்ப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (20-11-2024) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

image

திருக்கோவிலூர் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் னால திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்களின் மீதான நிலை குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் உள்ள நீண்டகால கோப்புகள், தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களின் முக்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 19, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் நாளை தீர்ப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

image

சங்கராபுரம் ஒன்றியத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சங்கராபுரத்தில் இன்று வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளின் விபரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

News November 19, 2024

 கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் அறிவிப்பு 

image

 கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவகள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்று கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி  ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

News November 18, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (நவ.18) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100 என்ற எண்ணையும் அழைக்கலாம்ன மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!