India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதற்காக இன்று அவர் கள்ளக்குறிச்சி வந்தடைந்த நிலையில், வடக்கு மற்றும் தெற்கு திமுக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், மகளிரணியைச் சேர்ந்த தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச்.12) கள்ளக்குறிச்சி மாலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகத் திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வருகையின் போது, மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கு

க.மாமனந்தலை சேர்ந்த அம்முக்கும் அந்தோணி ராபினுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அந்தோணி ராபின் தனது மனைவி அம்மு மீது சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.கடந்த மார்ச் 8ம் தேதி மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு அந்தோணி ராபின் பெட்ரோல் ஊற்றி தனது உடம்பில் தீ வைத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நாளை அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதனை இன்று (மார்ச்.11) கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.