Kallakurichi

News November 22, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

News November 22, 2024

கள்ளக்குறிச்சியில் கால அவகாசம் நீட்டிப்பு; ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேற்று முன்தினம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2024-25ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்ய வேண்டும். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த கால வரம்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 21, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 21.11.2024 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 21, 2024

கள்ளக்குறிச்சியில்  2924 வீடுகள் அடுத்த மாதம் கட்டி முடிக்க திட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் முழுவதும் 2,924 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும் அதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.

News November 21, 2024

கள்ளக்குறிச்சி மாணவிகள் சாதனை

image

குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

News November 21, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; மரணம் 

image

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து வந்த ஈச்சர் லாரி, டாரஸ் லாரியின் பின்பகுதியில் மோதிய விபத்தில் ஈச்சர் லாரி கிளீனர் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

News November 21, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் காப்பீட்டை பொது சேவைகள் மையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதி மக்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – அண்ணாமலை

image

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!