Kallakurichi

News November 19, 2024

குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

image

சங்கராபுரம் ஒன்றியத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சங்கராபுரத்தில் இன்று வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளின் விபரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

News November 19, 2024

 கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் அறிவிப்பு 

image

 கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவகள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்று கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி  ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

News November 18, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (நவ.18) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100 என்ற எண்ணையும் அழைக்கலாம்ன மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News November 18, 2024

இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இது குறித்த கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் உள்ள வீட்டின் முன்பு உள்ள புதர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயவர்மன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது அத்தீப், சையத் ஷாநாவஸ், மல்லாபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 1086 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

அதிமுக தலைமை கழக பொறுப்பாளர்கள் இன்று வருகை

image

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மகாலில் இன்று அதிமுகவின் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்யவும், அதிமுக உறுப்பினர்கள் உரிமை சீட்டுகள் முழுமையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்திட அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் வருகை தர உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அறிவித்துள்ளார்.

News November 17, 2024

அதிமுக வர்த்தக அணி செயலாளராக அருண்குமார் நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நகர அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக நகர வர்த்தக அணி செயலாளராக அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

error: Content is protected !!