Kallakurichi

News November 21, 2024

கள்ளக்குறிச்சி மாணவிகள் சாதனை

image

குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

News November 21, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; மரணம் 

image

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து வந்த ஈச்சர் லாரி, டாரஸ் லாரியின் பின்பகுதியில் மோதிய விபத்தில் ஈச்சர் லாரி கிளீனர் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

News November 21, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் காப்பீட்டை பொது சேவைகள் மையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதி மக்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – அண்ணாமலை

image

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம்: இபிஎஸ் வரவேற்பு

image

அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 20, 2024

கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சி அருகே விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரித்து வந்துள்ளது.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உத்தரவிட்டனர்.மேலும், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இன்று தீர்ப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (20-11-2024) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

image

திருக்கோவிலூர் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் னால திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்களின் மீதான நிலை குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் உள்ள நீண்டகால கோப்புகள், தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களின் முக்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News November 19, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் நாளை தீர்ப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!