Kallakurichi

News December 1, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கனமழை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எம்.எஸ்.பிரசாநந்த் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

ஃபெஞ்சல் புயல் மாமால்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று கரையை முழுமையாக கடந்த நிலையில், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது

News December 1, 2024

கள்ளக்குறிச்சியில் 2000 மில்லி மீட்டரை தாண்டிய மழையின் அளவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 இடங்களில் மழை அளவிடும் கருவி வைத்து மழையை அளவீடு செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 2331 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழையின் அளவு 97 மில்லி மீட்டராகும்.

News December 1, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் 

image

தமிழகத்தில் பரவலாக நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் 34.5 மி.மீட்டர், கள்ளக்குறிச்சியில் 10 மி.மீட்டர், கச்சிராயபாளையம் 4 மி.மீட்டர், மாடாம்பூண்டி 11 மில்லி மீட்டர், திருப்பாலபந்தல் 10.5 மில்லி மீட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.

News December 1, 2024

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 15 பேர் தேர்வு

image

108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவி பணியாளருக்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (30/11/2024) நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவற்றில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தகட்ட பயிற்சிக்காக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News December 1, 2024

அதிகபட்சமாக திருக்கோவிலூர் பகுதியில் 34.5 மி.மீ மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 12 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு. அதிகபட்சமாக திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக திருக்கோவிலூர் தாலுகா பகுதியில் 34.5 மி.மீ மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது.

News December 1, 2024

மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி குறித்து அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

மழைக்காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது ஃபெங்கல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையின் பொதுமக்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவை எனில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள இலவச எண்ணையும் அதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஏழு வருவாய் வட்டங்களிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ள எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது

News November 30, 2024

தியாகதுருகம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

image

தியாகதுருகம் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் உதவி ஆய்வாளரிடம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டும் வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தும், கேட்டறிந்தார். உடன் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!