India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாலபந்தல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நூலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருபாலப்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் போக்குவரத்து சாலை விபத்துக்களை நிரந்தரமாக தடுக்கும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் சாலை பாதுகாப்பு பணியாளர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஆலோசனை கூறினார். சாலை விபத்துகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அலுவலர்கள் ஊழியர்கள் உடனே இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடந்தது. 50, 100 மற்றும் 200 மீட்டர் தொலைவுக்கு மற்றும் 4 வகையான ‘ஸ்டைல்’களில் தனி,தனியாக போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (29ம் தேதி) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை நடக்க இருந்த விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு அம்பேத்கர் திட்டம், பாரத பிரதமர் திட்டம் என இளைஞர்களை தொழில் முனை ஊக்குவிக்கும் வகையில் தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம் 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் செலுத்த பலமுறை கூறியும் பலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து கட்டாதவர்கள் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்திருந்தனர். இருந்தும் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை செய்யலாம் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்களை நேரில் சந்தித்து பரிசு தொகை பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவி சசிகலா தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட கபாடி போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவரை பாராட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.