Kallakurichi

News November 29, 2024

சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் நாளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சுற்றுலா மாளிகை கட்டிடப் பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 29, 2024

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 5 அன்றும், நேரு பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 6 அன்றும், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர், மாணவிகள் போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் 403 பேருக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் 403 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மூன்று கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் மானியத்தில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி தற்போது பயன் அடைந்து வருகிறார்கள் என கூறினார்.

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை நேர்முகத் தேர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் நாளை கள்ளக்குறிச்சியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட மருத்துவ உதவியாளருக்கு தேவையான படிப்பு முடித்தவர்கள் உரிய சான்றிதழுடன் நாளை கலந்து கொள்ளலாம் என மேலாளர் தெரிவித்தார்.

News November 29, 2024

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை கடித்த நாய்கள்; மரணம் 

image

உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற 80 வயதான முதிய பெண்மணி  உடல்நிலை குறைவால் படுத்து படுக்கையாக வீட்டில் இருந்து உள்ளார். நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த தெரு நாய்கள் இந்த பெண்ணை கடித்துக் குதறியது. இதை பார்த்த அவருடைய மருமகள் அஞ்சலி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டனர். ஆனாலும் கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News November 29, 2024

கள்ளக்குறிச்சி அருகே தலைமை ஆசிரியர், சமையலர் சஸ்பெண்ட் 

image

கல்வராயன்மலை அடுத்த இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிட துவக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியில் சமையல் செய்த பாத்திரங்களை மாணவியர் கழுவும் வீடியோ பரவியது.மாணவியரை சமையல் பாத்திரங்களை கழுவியது தொடர்பாக,பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஸ்டீன்,சமையலர் ராதிகா ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து,கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுந்தரம் உத்தரவிட்டார்.

News November 28, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (28.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை படிப்புவரை படித்துள்ள பழங்குடியினர் இளைஞர்களுக்கு ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் 30.11.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருமந்துறை அருகே கோவில் காடு கிராமத்தில் ஶ்ரீனித் இன்டர்நேஷனல் என்னும் மையத்தில் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில்பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

கள்ளக்குறிச்சியில் மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். இதன் காரணமாக, நாளை கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழையும், வரும் 30ஆம் தேதி அதிகனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!