Kallakurichi

News December 1, 2024

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 15 பேர் தேர்வு

image

108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவி பணியாளருக்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (30/11/2024) நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவற்றில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தகட்ட பயிற்சிக்காக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News December 1, 2024

அதிகபட்சமாக திருக்கோவிலூர் பகுதியில் 34.5 மி.மீ மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 12 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு. அதிகபட்சமாக திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக திருக்கோவிலூர் தாலுகா பகுதியில் 34.5 மி.மீ மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது.

News December 1, 2024

மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி குறித்து அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

மழைக்காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது ஃபெங்கல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையின் பொதுமக்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவை எனில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள இலவச எண்ணையும் அதேபோன்று மாவட்டத்தில் உள்ள ஏழு வருவாய் வட்டங்களிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ள எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது

News November 30, 2024

தியாகதுருகம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

image

தியாகதுருகம் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் உதவி ஆய்வாளரிடம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டும் வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்தும், கேட்டறிந்தார். உடன் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 30, 2024

அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய 2 தினங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் அவசர உதவிக்கு 7397389323, 9865327478 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

கள்ளக்குறிச்சியை சேர்ந்த மர சிற்பிக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மர சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பகுதியாகும். இந்நிலையில் நேற்று மகாபலிபுரத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மர சிற்பி ராஜ்குமாருக்கு, தமிழக அரசின் சிறந்த கைவினைஞர் விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார். கைத்திறன் துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, மேலாண் இயக்குனர் அமிர்தஜோ உடனிருந்தனர்.

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சியில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நவம்பர் 30-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!