India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (15.13.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம்.
திருக்கோயிலூர் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற ரமேஷ் என்பவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். தொடர்ந்து அவரைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் சி.மெய்யூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் ரமேஷ் உடல் இன்று கரை ஒதுங்கியது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் மது போதையில் செல்வதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதும் போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 37 பேரும் இது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.24, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.90, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் அருகே பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). இவர் நேற்று அணைக்கட்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் நிகழ்விடம் சென்று ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை கள்ளக்குறிச்சியில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (15.13.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 1மணி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.