Kallakurichi

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

வங்கியில் கொள்ளை முயற்சி: தப்பிய 100 கிலோ தங்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கியில் கொள்ளையன் நுழைய முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் மிரண்டு திருடன் ஓடியனான். இதனால், 100 கிலோ தங்கம் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையனை தேடி வருகின்றனர். வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 6, 2025

இந்தியன் வங்கியில் திருட முயற்சி- 100 கிலோ தங்கம் தப்பியது 

image

திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று மாலை வங்கிப் பணிகள் முடிவடைந்து வங்கியின் மேலாளர் வங்கி மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உடனடியாக வங்கி மேலாளர் வங்கி உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2025

புதிய ரேஷன் கடையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

image

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தானம், மற்றும் மயிலாடுந்தாங்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன் கலந்து கொண்டார்.

News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 6, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் பணியிட பாலியல் புகார்கள் குறித்து, உதவி எண், 181ல், பெண்கள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் பயிற்சி பட்டறை நடந்தது. அனைத்து அலுவலகங்களிலும் உள்ளகக் குழு அமைத்தல், புகார் பெட்டி, 181, இணையதளம் வழியாக புகார்களை தெரிவிக்கலாம் எனக் கலெக்டர் கூறினார்.

News March 5, 2025

பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துறை சார்ந்த பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் மொத்தமாக 1691 தேர்வாளர்கள் கணினி வழியில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 69 மாற்றுத்திறனாளிகளும், 25 மாற்றுத்திறனாளிகள் சொல்லி எழுதுபவர்களும் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

திருக்கோவிலூர் டிஎஸ்பி முக்கிய அறிவிப்பு

image

திருக்கோவிலூர் காவல் உட்கோட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது பகுதியில் போதைப் பொருட்கள் விற்பதோ அல்லது பயன்படுத்துவதோ குறித்து தகவல் கிடைத்தால் 9626121985 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!