India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினரை கண்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை என்று குறை கேட்பு கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வந்த குறை கேட்பு இன்று நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் இன்று மனு அளிக்கும் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை சங்கராபுரம் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்கராபுரம், பாண்டலம், வட செட்டியந்தல், திம்மநந்தல், அரசம்பட்டு மஞ்சபுத்தூர், புதுப்பட்டு ரங்கப்பனூர், புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (8.13.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சகாயம் என்பவர் அவருடைய பெட்டி கடையில் 4830 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்து வந்தது கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் ரத்த தானம் வழங்கினார்கள். அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் டிஎஸ்பி அலுவலக எழுத்தர் (காவலர்) சிவக்குமார் ஆகியோர் ரத்ததானம் வழங்கினர். அதே போல் பல பேர் இன்று ரத்த தானம் வழங்கினார்கள்.
திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கத்தார் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகத்தின் சார்பாக 20 பேர் கலந்து கொண்டு 8 பேர் தங்கப்பதக்கமும் மற்றும் 12 பேர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பயிற்சியாளர்கள் சூரியமூர்த்தி, தமிழ்ச்செல்வன் ராகுல்பரதன் ஆகியோர் வாழ்த்தினர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், உடைமைகள் சேதமடைந்தன.இந்நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேதங்கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியில் வெள்ள பாதிப்பு விபரங்கள் குறித்து மத்திய குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெள்ள சேதங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர்கள் அதனை பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியின் நகர் மன்ற தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் மற்றும் 27 நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்திடம் இன்று வழங்கினர். இச்செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.