India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரிக்க வேண்டிய உள்ளதால் இதை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்றும், சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இதில், சிபிஐ விசாரிப்பதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான ரயில் வழிப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் கோரிக்கை வைத்து பேசினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை இன்றுவழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 518 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது டிசம்பர் 17-ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் பாமக சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (15.13.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம்.
திருக்கோயிலூர் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற ரமேஷ் என்பவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். தொடர்ந்து அவரைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் சி.மெய்யூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் ரமேஷ் உடல் இன்று கரை ஒதுங்கியது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் மது போதையில் செல்வதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதும் போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 37 பேரும் இது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.24, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.90, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
Sorry, no posts matched your criteria.