India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் இன்று (08.01.2025) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு வரும் ஜன.31ம் தேதி வரை விசாரணை மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு (தோல்வி, தேர்ச்சி), அதற்கு மேலான கல்வித் தகுதி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த பதிவினை புதுப்பித்து வரும் 31.03.2025 அன்றைய தேதியில் ஐந்தாண்டு நிறைவடைந்த பின்னர் வேலை வாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் வரும் ஜன.11ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை என வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகவும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சர்வதேச வேட்டிகள் தினம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆண் அரசு ஊழியர்கள் அனைவரும் பாரம்பரியமான வேட்டி கட்டிக்கொண்டு பணியாற்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இதனைத் தொடர்ந்து அலுவலக நேரம் முடிவில் மாவட்ட ஆட்சியருடன் அனைத்து அரசு ஊழியர்களும், ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (6.1.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள், மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் மொத்தமாக 377 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் ரயில்வே கேட் அருகில் மது போதையில் நடந்து வந்தவர் மீது ஆட்டோ மோதியதால் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இது குறித்து சின்னசேலம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரின் கவனகுறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.