India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாதாந்திர வருவாய் நிர்வாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் அலுவலகத்தில் 1.1.2025 தொடக்க காலாண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், புதுப்பிக்காத இளைஞர்கள் வரும் 31.3.2025 தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 12 வார்டில் உள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை ஒன்றிய செயலாளர் வசந்தவேல் பொதுமக்களுக்கு கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
தியாகதுருகம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழர் திருநாள் தை பொங்கல் 2025 பரிசு தொகுப்பினை பெற தகுதி வாய்ந்த 4 லட்சத்து 37,180 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் என மொத்தமாக 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 குடும்ப அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அரிய வகை நட்சத்திர ஆமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த அரிய வகை நட்சத்திர ஆமையை அப்பகுதி மீனவர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.