Kallakurichi

News December 31, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 387 மனுக்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 387 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

News December 30, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கலெக்டர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.30) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு, நல வாரியம் மூலம் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News December 30, 2024

விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று இரவு சாலை பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பேசிய ஆட்சியர் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

News December 30, 2024

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.49 கோடி தேவை 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்குள்ளான 98 ஆயிரத்து 115 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சாகுபடி நிலங்களுக்கு 43 ஆயிரத்து 476 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மொத்தம் ரூ.49 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது.

News December 29, 2024

ஆதிபராசக்தி பக்தர்கள் சாலை மறியல் போராட்டம்

image

சின்னசேலம் அருகே உள்ள செருவத்தூர் கிராமத்தில் ஆதிபராசக்தி கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது உயர் மின்னழுத்த கம்பிகள் கட்டிடத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்தால் மின்வாரியத்திடம் மின்கம்பிகளை மாற்றி அமைக்க கூறியுள்ளனர். அவர்கள் ஏற்க மறுத்ததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 29, 2024

கள்ளக்குறிச்சி சந்தையில் காய்கறி விலை

image

கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 29) காய்கறி விலை. தக்காளி ரூ.25, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,.முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 29, 2024

காவல்துறைக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியர் 

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். அப்போது பேசிய கலெக்டர், மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக உரிய நேரங்களில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரை வழங்கினார்.

News December 29, 2024

கள்ளக்குறிச்சியில் சைக்கிள் போட்டி; ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி சைக்கிள் போட்டியில் நடைபெறுகிறது. இதில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 10 கிலோமீட்டர், 15 வயதிற்கு உட்பட்டவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவிலும் சைக்கிள் ஓட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

News December 28, 2024

கள்ளக்குறிச்சி சந்தையில் காய்கறி விலை விவரம்

image

கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 28) காய்கறி விலை. தக்காளி ரூ.28, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,.முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!