India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழர் திருநாள் தை பொங்கல் 2025 பரிசு தொகுப்பினை பெற தகுதி வாய்ந்த 4 லட்சத்து 37,180 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும், 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் என மொத்தமாக 4 லட்சத்து 37 ஆயிரத்து 253 குடும்ப அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கனகனந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அரிய வகை நட்சத்திர ஆமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த அரிய வகை நட்சத்திர ஆமையை அப்பகுதி மீனவர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் இன்று (08.01.2025) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்திற்கு வரும் ஜன.31ம் தேதி வரை விசாரணை மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு (தோல்வி, தேர்ச்சி), அதற்கு மேலான கல்வித் தகுதி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த பதிவினை புதுப்பித்து வரும் 31.03.2025 அன்றைய தேதியில் ஐந்தாண்டு நிறைவடைந்த பின்னர் வேலை வாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் வரும் ஜன.11ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை என வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகவும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.