India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மூன்றாவது புத்தகக் கண்காட்சியினை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் துரைமுருகன். இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊரில் இருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார். மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என தந்தை வற்புறுத்தியதால் நேற்றைய முன்தினம் துரைமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கண்ணகி,33; இவர், அதே பகுதியில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, ராஜா என்பவரின் கிணறு அருகில் சென்ற போது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பட்ஜெட் தாக்கல் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒன்றிய தலைநகரங்களில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சின்னசேலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயில் மலையை காக்கவும், மத நல்லிணக்கத்தை காக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் உள்ள 22 ஒன்றியங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சத்திய நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட வருவாய் அலுவலராக, கோயம்புத்தூர் நெடுஞ்சாலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜீவா நியமிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஜீவா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐந்து இடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து, விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் குமரகுரு மற்றும் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சங்கராபுரம், பண்டலம், வட சிறுவள்ளூர், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், ஜவுளிக்குப்பம், பச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.