India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும் மே10ம் தேதி பாவந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
தமிழகத்தில் உள்ள வைணவ கோவில்களில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்கு பிறகு மூன்று உயரான கோபுரத்தை கொண்ட கோயிலாக திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.108 திவ்ய தேச தலங்களில் 42 வது தலமாக அமைந்துள்ள இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04151-228191, திருக்கோவிலூர்- 04153 – 252104, உளுந்தூர்பேட்டை- 04149-220222. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான 1,299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு www.tnusrb.yn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30ம் தேதி முதல் வார கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு அலவலகத்தில் நடத்தப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 28 இடங்களில் பயிற்சி, தங்கும் வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.சேர்க்கை பெற விண்ணப்பப்படிவம், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே, மாதம் 5ம் தேதி கடைசி நாள் என ஆட்சியர் தகவல்.
திரைப்பட நகைச்சுவை காட்சியில் அங்கவை சங்கவை என்ற பெயர்களை பார்த்திருப்பீர்கள். நகைச்சுவை தண்டி இந்த பெயர்கள் தமிழோடும் கள்ளக்குறிச்சியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் மறைவுக்கு பின் அவரது மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் கபிலர் அழைத்து வந்து திருக்கோவிலூரில் ஒருவருக்கு மணம் முடித்து வைத்து பின் கபிலர் குன்றில் உயிர் நீத்தார். தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.