India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் முதுகலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மடிக்கணினி பெற தங்களின் பெயர், அடையாள அட்டை எண், பயனாளியின் போனோபைட் சான்றிதழுடன் பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இங்கே <
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி என்பவரும், மாவட்ட கழக இணை செயலாளராக மோகன் என்பவரும், பொருளாளராக சுந்தரமூர்த்தி என்பவரும், துணைச்செயலாளர்களாக தமிழரசி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று (ஜன.24) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடைகளை அனுமதியின்றி வாகனங்களில் கொண்டு செல்வது, வாகனங்களில் கால்நடைகள் சுவாசிக்க போதுமான இடம் அளிக்காமல் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு அனுமதியின்றி வாகனங்களில் கால்நடைகளை கொண்டு சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜீலு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜன.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.