India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே இருக்கும் BSNL டவர் மீது உச்சியில் ஏறி நின்று ஒரு வாலிபர் தன்னை காதலித்த பெண் தற்போது காதலிக்க மறுத்ததால் காதலித்த பெண் வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி நேற்று காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கள்ளக்குறிச்சி நல்லபுள்ளியம்மன் ரைஸ் மில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் அதிவேகமாகவும் அலட்சியமாகவும் பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுபாஷ் சந்திர போஸ், சங்கீதா இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நேற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி கணவர் கோவிந்தன் என்பவரை ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுப்பு பள்ளம் எடுத்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் சங்கராபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி நேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி கணவர் கோவிந்தனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுப்பு பள்ளம் எடுத்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் சங்கராபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 தொடங்கி 23 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திறந்து வைத்து புத்தகக் கண்காட்சியை பார்வையிடுகிறார். இதில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுப்பேட்டை கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி சின்னப்பொண்ணு என்பவரது நிலப்பிரச்சினை தொடர்பாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவரை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தநிலையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.