India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் வரும் 14ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி 23ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் சிந்தனைகளை தூண்டும் வகையிலும் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளன. கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்.11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000- ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மூன்றாவது புத்தகக் கண்காட்சியினை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் துரைமுருகன். இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊரில் இருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார். மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என தந்தை வற்புறுத்தியதால் நேற்றைய முன்தினம் துரைமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கண்ணகி,33; இவர், அதே பகுதியில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, ராஜா என்பவரின் கிணறு அருகில் சென்ற போது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பட்ஜெட் தாக்கல் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒன்றிய தலைநகரங்களில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சின்னசேலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.