Kallakurichi

News February 16, 2025

பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி உயிரிழப்பு

image

பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்.இவர் நேற்று திருக்கோவிலுார் – மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் உயிரிழந்தார். இது குறித்து நேற்று போலீசார் வழக்குப்பதித்தனர்.

News February 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 15.2.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News February 15, 2025

புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் வி.எம் திடல் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாவது கல்லை புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று பொது மக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 15, 2025

வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் வீரசோழபுரம் சிவன்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது. தந்தை இறந்த பின் ராஜேந்திரசோழன், அவருடைய அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்ததாக சொல்லப்படுகிறது.

News February 15, 2025

பாஜக பெண் நிர்வாகி மீது ரூ.20 லட்சம் மோசடி புகார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார் பேட்டைமேடு பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி 100 நாள் வேலைத்திட்ட பணியை மேற்பார்வையாளராக இருந்துள்ளார். தற்போது, அந்த பணியில் இல்லை. 100 நாள் வேலை பணியாளர்களின் ஆதார் நகலை வைத்து ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக டிஎஸ்பியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2025

டவர் கம்ப உச்சியில் நின்று வாலிபர் அலப்பறை

image

உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே இருக்கும் BSNL டவர் மீது உச்சியில் ஏறி நின்று ஒரு வாலிபர் தன்னை காதலித்த பெண் தற்போது காதலிக்க மறுத்ததால் காதலித்த பெண் வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி நேற்று காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

News February 14, 2025

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – இருவர் படுகாயம்

image

பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் கள்ளக்குறிச்சி நல்லபுள்ளியம்மன் ரைஸ் மில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் அதிவேகமாகவும் அலட்சியமாகவும் பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுபாஷ் சந்திர போஸ், சங்கீதா இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நேற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நல அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News February 13, 2025

சங்கராபுரத்தில் எஸ்பி நேரில் ஆய்வு

image

சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி கணவர் கோவிந்தன் என்பவரை ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுப்பு பள்ளம் எடுத்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் சங்கராபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி நேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!