India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி வேளாண்துறை சார்ந்த முக்கிய விவரங்களை அறிய தச்சூரில் அமைந்துள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை 9385819421 என்ற எண்ணின் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தினை 9385890420 என்ற எண்ணிலும் தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள 9 ஒன்றியங்களுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மேற்கு முருகன், கிழக்கு ராஜேஷ், சங்கராபுரம் கிழக்கு ரவி, கல்வராயன்மலை மணிமாறன், உளுந்தூர்பேட்டை கிழக்கு சரவணன், மேற்கு கண்ணன் குமாரவேல் ரிஷிவந்தியம் மத்தியம் குழந்தைவேல் திருக்கோவிலூர் தெற்கு செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தொழில் முனைவோர் சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வடக்கநந்தல் மணலூர்பேட்டை, பையத்துந்துறை, எலவனாசூர்கோட்டை, சின்னசேலம் வாணாபுரம், தியாகதுருகம், கொள்ளியூர், காராம்பாளையம், ஈய்யனூர். ஈருடையாம்பட்டு, அசகளத்தூர், கேஆலத்தூர் ஆகிய 15 இடங்களில் பொதுமக்கள் மலிவான விலையில் மருந்துகள் வாங்கி பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் குடிமைப் பொருள் வட்டாட்சியர் பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை திட்டங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம் எஸ் பிரசாந்த் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய சுகாதாரத் துறை திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீவிர வாகன சோதனை மேல் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகனங்களுக்கு உரிய சான்றிதழ்கள் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், மது போதையில் வாகனம் இயக்குதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மாநில அளவில் மொத்தம்,100 பேருக்கு விருதும், தலா ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. கலெக்டர் குழுவினர் தகுதி வாய்ந்த, 3 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்வர்.இதற்கான, விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் தகவல்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.