India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சியில், 285 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை நீர்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்படுகிறது இணையவழி ஏலம் நடக்கும் பங்கேற்க விரும்புவோர் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் 19494/எப்3/2024/9 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை வரும் 22ம் தேதி பகல் 2:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Overman & Mining Sirdar பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 171 காலி பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம். Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும். SHARE பண்ணுங்க
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது புதிய விதிமுறையால் டிரைவர், கண்டெக்டர் பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிக்க முடியாது. இரண்டு லைசென்ஸ்களும் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதக கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.