India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை குறித்தான கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு, தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்ச வரம்பு, ரூ.1.20 லட்சமாக, உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, வருமான சான்று, மற்றும் இரண்டாவது பெண் குழந்தை 3 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சராபாளையம் செல்லும் சாலையில் கடத்தூர் ரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிபாரதி மாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் தனியார் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள கலைஞர் திடல் பகுதியில் நாளை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கவுள்ளதாகவும், இதில் தலைமை கழக பேச்சாளர்கள் மூன்று பேர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டம் முகாம்களை சிறப்பாக நடத்திடும் பொருட்டு மனுக்கள் பதிவேற்றம் செய்வது குறித்து அனைத்துத் துறைகளில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் ஆகியோருக்கு இன்று (11.03.2025) பயிற்சி வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 582 பேரும், மாற்றுத்திறனாளிகள் 16 பேர் என மொத்தம் 598 மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி, அன்பரசு ஆகிய இருவரும் தொட்டியம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெறும் சந்தைக்கு காய்கறி வாங்க செல்லும்போது மெயின் ரோட்டில் உள்ள பழைய ரைஸ் மில் அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த கணபதி அன்பரசன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கணபதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.