Kallakurichi

News June 20, 2024

கல்விச் செலவை அதிமுக ஏற்கும் – எடப்பாடி பழனிசாமி

image

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்று(ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

News June 20, 2024

கள்ளச்சாராயம் குடித்த கணவன்-மனைவி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வடிவு ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News June 20, 2024

கள்ளச்சாராயம் குடித்த 200 பேர்!

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம்(ஜூன் 18) துக்க நிகழ்வில் பங்கேற்ற 200 பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், 127 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 90க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 20, 2024

“காவல் நிலையத்திற்கு பின்பே கள்ளச்சாராயம் விற்பனை”

image

கள்ளகுறிச்சி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், அதிகாரிகளும் அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. மேலும் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். மிகப்பெரிய கும்பல் இதற்கு பின்னால் இருப்பதாக கூறிய இபிஎஸ், அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

நேரில் ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுவரை 37 உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

News June 20, 2024

கள்ளச்சாராயம் குடித்து பலி: ரூ.10 லட்சம் நிவாரணம்

image

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற கோகுல்தாஸ் தலைமையில் தனிநபர் விசாரணை அமைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 33 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 37 ஆகியுள்ளது. தொடர் மரணத்தால் கருணாபுரம் பகுதியே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 20, 2024

அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் – அன்புமணி

image

கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

33 பேரின் உயிரிழப்புக்கு காரணமான துக்க நிகழ்வு!

image

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதே பலரின் உயிரிழப்பு காரணம் என தெரிய வந்துள்ளது. சாராயம் குடித்து இறந்த சுரேஷ் என்பவரின் துக்க நிகழ்விலும் சாராயம் பரிமாறப்பட்டுள்ளது. அதை கள்ளச்சாராயம் என தெரியாமல் அருந்தியதால்தான் இத்துயர சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே, சுரேஷ் உயிரிழந்தது குறித்த காரணம் புரிந்துள்ளதாகவும் தகவல்.

News June 20, 2024

கள்ளச்சாராய விவகாரம்: 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையை தொடங்கிய நிலையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சேலம் டிஐஜி தெரிவித்துள்ளார். தொடர் மரணங்களால் கருணாபுரம் பகுதியே கண்ணீரில் தத்தளிப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!