Kallakurichi

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. சீலிடப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News April 25, 2024

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு

image

கள்ளக்குறிச்சி, தென்பெண்ணை ஆற்றில் அருகில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது. இக்கோயிலின் சிறப்பாக பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில், மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். இது நிலத்தை அளக்கும் கோலமாகும். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளது தனித்துவமானது.

News April 25, 2024

லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மேலும், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: போதிய பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

image

சித்திரை பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனர்.  25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

News April 24, 2024

கள்ளக்குறிச்சி: போலி நகையை அடகு வைத்த பெண் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கடைத்தெரு பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு சரண்யா என்பவர் அடகு வைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்தபோது நகை போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கைது செய்தனர்.

News April 24, 2024

கள்ளக்குறிச்சி: சோதனையில் ஈடுபட்ட போலீசார்

image

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் இன்று சுமார் 1/4 மணி நேரத்திற்கு மேலாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

News April 24, 2024

அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். இதில், காலி குடங்களுடன் சிறுவர்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சாலையில் வரிசையாக குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 24, 2024

கள்ளக்குறிச்சியில் கடுமையான வெப்ப அலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் கடந்த சில நாட்களை விட வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி வெப்ப அலையும், அதிக அளவில் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இன்று 105 டிகிரி செல்சியஸ் முதல் 109 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்பம் நிலவியது.

News April 24, 2024

நாளை திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி

image

உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.

error: Content is protected !!