Kallakurichi

News May 4, 2024

உளுந்தூர்பேட்டையில் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை பயணத்தை துவங்கியுள்ள பயணியர் ரயிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் உளுந்தூர்பேட்டை வளர்ச்சிக்கு குழு சார்பிலும் மலர் தூவி ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் Dyfi மாநில இணை செயலாளர் செல்வராஜ் உளுந்தூர்பேட்டை வளர்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்பாபு மற்றும் ஹரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

News May 3, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருவாய் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News May 3, 2024

கள்ளக்குறிச்சியின் தும்பராம்பட்டு குகை!

image

கல்வராயன் மலைத்தொடரில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது தும்பராம்பட்டு குகை. குகைக்கு செல்லும் வழியில் தொட்டிமடுவு என்னும் சிற்றோடு இயற்கையோடு அமைந்துள்ளது. மிகச்சிறிய குகையான இதில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் பொரிக்கப்பட்டுள்ளது. மனிதன், வேட்டைநாய், காளைமாடு உருவங்களும், மக்கள் நடனமாடுவது போன்ற உருவங்களும் பாறையில் பொரிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

கள்ளக்குறிச்சி: 34 ஆண்டுகள் கழித்து மாணவர்கள் சந்திப்பு

image

கள்ளக்குறிச்சி, கச்சராபாளையம் அடுத்த வடக்கனந்தல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-1990 ஆண்டுகளில் மேல்நிலை வகுப்பு படித்த முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 34 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாரிகள் நன்கொடையாக வழங்கினர்.

News May 2, 2024

கள்ளக்குறிச்சி: தங்கச் சங்கிலி பறித்த திருடர்கள் கைது

image

திருக்கோவிலூர் அருகே நேற்றுமாலை 2 பேர் பள்ளி ஆசிரியையிடம் 4.5 சவரன் செயினைப் பறித்து பைக்கில் தப்பியோடினர். தகவலறிந்த போலீசார் வாகன தணிக்கை செய்த போது, இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தனர். சுற்றி வளைத்து விடிய விடிய போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று அதிகாலை அபிமன்யம் (23), அருள் ஜோதி (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News May 2, 2024

கள்ளக்குறிச்சி: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தனிப்படை போலீசார் நேற்று உளுந்துார்பேட்டை கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்த தேவா(18), மதியனூரை சேர்ந்த தமிழரசன்(18), நிஷாந்த் 19 ஆகியோரை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இடுப்பில் கத்தியுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News May 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

கள்ளக்குறிச்சி அருகே வெறிச்சோடிய சாலை

image

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் வெப்ப அலையும் அதிக அளவில் வீசி வந்ததால் மதிய நேரத்தில் கடும் வெயிலையும் வெப்ப அலையும் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பலரும் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால், பல்வேறு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

News May 1, 2024

உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி

image

உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு மகளின் வாழ்க்கையை காப்பாற்ற சொல்லி புகார் கொடுத்து உளுந்தூர்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் சற்று நேரத்திற்கு முன் 2 பேரக் குழந்தைகளுடன் உடம்பில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

News May 1, 2024

கள்ளக்குறிச்சியில் தீ போல் கொளுத்தும் வெயில்

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கள்ளக்குறிச்சியில் இன்று 108° செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது. அது மட்டுமன்றி வெப்ப அலையும் அதிகளவில் இருந்து வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!