India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கவலையளிப்பதாகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனங்களை இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன்.21 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாளை பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம் என இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வரும் ஜூன் 21-ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் மின் விசிறி மற்றும் மின் விளக்குகள் எரியாததால் கர்ப்பிணி தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணி தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மேலேரி கிராமத்தில், சங்கராபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வீரன் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன் 15) சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சேஷசமுத்திரம் மணிகண்டன்,( 36) சக்கரவர்த்தி, (44)ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 25 லிட்டர் சாரா யத்தை கைபற்றினார் .
ஜூன்.19ஆம் தேதி அன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளுக்கு நேற்று அறிவுறுத்தி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.