India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

கள்ளக்குறிச்சி: கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.சடையன் (70). விவசாயியான இவா் 10 ஆடுகள் வளா்த்து வருகிறாா். சடையன் அதே கிராமத்தில் உள்ள மண்ணோடை அருகே இச்சிலி மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சடையன் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: கிணத்துவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் மொ.சடையன் (70). விவசாயியான இவா் 10 ஆடுகள் வளா்த்து வருகிறாா். சடையன் அதே கிராமத்தில் உள்ள மண்ணோடை அருகே இச்சிலி மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளாா். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சடையன் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரியைச் சேர்ந்த சீனுவாசன் (36), மங்களூருவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த அவர், தினமும் மது குடித்துவிட்டு மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்த அவர், நேராக அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவா்கள் முகமது யாசின், ஹாசினா பானு. தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 2-வது குழந்தையான ஆலியா பிறந்து 22 நாட்களே ஆகின்றன. நேற்று முன்தினம், குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்த நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று
இரவு 12மணி முதல் காலை 6 மணி வரை
மாவட்ட இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை
அவசர உதவி எண் 100 / 98843 04100
என்ற எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (09.01.2026) திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நேரலை நிகழ்வினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, “உங்க கனவை சொல்லுங்க” திட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.