Kallakurichi

News June 20, 2024

கள்ளச்சாராய விவகாரம்: 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையை தொடங்கிய நிலையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சேலம் டிஐஜி தெரிவித்துள்ளார். தொடர் மரணங்களால் கருணாபுரம் பகுதியே கண்ணீரில் தத்தளிப்பது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

கள்ளச்சாரய மரணங்கள்: கவன ஈர்ப்பு தீர்மானம்

image

கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாளை விவாதிக்க சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்து அதிமுகவினர் நேரம் கேட்கவுள்ளனர். கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியம் – விஜய்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், பிரபல நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாரயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மன வேதனையை அளிக்கிறது எனவும், இனிமேலாவது தமிழக அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் – கலெக்டர்

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உட்றகூராய்வு நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனையில் ஆய்வு செய்த புதிய கலெக்டர் எம்.எஸ்.பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

image

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்க, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(ஜூன் 20) காலை 10 மணிக்கு இவர் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாரம் குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் மற்றும் எஸ்பி மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

News June 20, 2024

29 பேர் உயிரிழப்பு: இதுவரை 3 பேர் கைது

image

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் விஜயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்றதாக ஏற்கெனவே கோவிந்தராஜ் அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் கைதாகியிருந்த நிலையில் தற்போது விஜயா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாரம் குடித்து உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்பி மாற்றம்!

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாத் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரஜத் சதுர்வேதி புதிய எஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

News June 19, 2024

அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயத்தால் பத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.

News June 19, 2024

கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தை பணியிட மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட செய்துள்ள முதல்வர், புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

News June 19, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் மறுப்பு

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!