India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த கருனாபுரம் பகுதியை சேர்ந்த 21 நபர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த 21 நபர்களின் உடல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த பேரிழப்பு கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். உடன் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் பரணி பாலாஜி அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 37 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 42 ஆகியுள்ளது. தொடர் மரணத்தால் கருணாபுரம் பகுதியே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழப்பு அதிகரிக்க காரணம் உண்மைய சொல்ல மறுத்ததால் தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாக்கெட் பாக்கெட்டாக கள்ளக்குறிச்சி நகர முக்கிய பகுதியில் கள்ள சாராய விற்பனை நடைபெற்றது ஏற்கக் கூடியதாக இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று(ஜூன் 20) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழக அரசு, காவல்துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இணையதளத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கபட்டு இதுவரை 37 பேர் இறந்துள்ளனர்.
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை என்று தெரிவித்த அவர், இறந்தவர்கள் அடித்தட்டு மக்கள் என கூறினார். இந்நிலையில், கள்ளச்சாராயம் எதிரொலி காரணமாக இணையத்தில் #Resign_Stalin டிரெண்டாகி வருகிறது.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்று(ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி வடிவு ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம்(ஜூன் 18) துக்க நிகழ்வில் பங்கேற்ற 200 பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், 127 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 90க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.