India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனாந்தல் கிராமத்திலும், திருக்கோவிலூர் அடுத்த விளந்தையிலும், திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலத்திலும், உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயரிலும், கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியிலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மகாலில் ஆகஸ்டு 9ஆம் தேதி காங்கிரஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடைபெற இருந்தது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் இன்று அறிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் தியாகதுருகத்தில் வேலை செய்து வருகின்றார். இவர் தியாகதுருகம் பகுதியில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டதற்கு அவரை ஜாதி பெயரை சொல்லி விக்னேஷ் திட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமி நேற்று காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்னேஷை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கள்ளக்குறிச்சியில் உள்ள 4,34,491 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
கீழையூர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயிலில், பண்டைய கால 6 கல்வெட்டு தூண்கள் நேற்று (ஆகஸ்ட் 3) தென்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், அவை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழனால் கல்வெட்டுகள் ஆகும். அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில ஊர்களின் பெயர்களும், தானமாக வழங்கப்பட்ட பொன் – பொருள் விவரங்களும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலையில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் குப்புசாமி மனுக்களை பெற்றார். நத்தம், புறம்போக்கு, மந்தவெளி போன்ற இடங்களில் 10 ஆண்டுகள் மேல் குடி இருந்தால் பட்டா வழங்கப்படும் என எம்எல்ஏ கூறினார்.
Sorry, no posts matched your criteria.