India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமண்டார்குடி கிராமத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவர் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த இராஜி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் அண்மையில் பலருக்கு இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,39,398 பேருக்கு இரத்த அழுத்த நோய், 75,510 பேருக்கு நீரிழிவு நோய், 57,734 பேருக்கு இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோய், 6,687 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சை, 10,153 பேருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் நேற்று (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வை இன்று கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் நேரில் சந்தித்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை அமைக்கப்பட்டு வரும் இரயில்வே வழித்தட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் பாதை அமைக்க வேண்டியும் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையின் வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சின்னசேலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் சம்பவத்தை தொடர்ந்து இன்று, கள்ளச்சாரயத்துக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் காட்டிய அலட்சியதுக்கு திமுக அரசுதான் காரணம். 6 நாட்களில் 41 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் சட்டம் ஒழுங்கில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோருக்கான மாதாந்திர குறைக்கேட்பு முகாம், கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் ஆறாம் தேதியும், திருக்கோவிலூரில் 13ஆம் தேதியும், சங்கராபுரத்தில் 20ஆம் தேதியும், உளுந்தூர்பேட்டையில் 27ஆம் தேதியும் கூட்டம் நடைபெறும் என மின்வாரிய மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.