Kallakurichi

News July 28, 2024

கள்ள சாராயம் முழுமையாக அழிக்கப்படும்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்வராயன்மலையில் நேற்று, தமிழக அமலாக்கத்துறை ஏடிஜிபி அமல்ராஜ் ஆய்வு செய்தார். 30 பேரை கைது செய்தும், ஆறு நபர்களை தடுப்பு காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என்றும் போலீசார் கூறினர். கள்ளக்குறிச்சியில் முழுமையாக கள்ள சாராயம் ஒழிக்கப்படும் என ஏடிஜிபி அமல்ராஜ் கூறினார்.

News July 28, 2024

கெடிலத்தில் கேட்பாரற்று கிடந்த பணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கெடிலம் பகுதியில் இந்தியன் வங்கி அருகே, பஞ்சர் கடை அருகில் ரூ.30,000 மதிப்புள்ள ரூ.500 ரூபாய் நோட்டு கட்டுகளை கீழே யாரோ தவறிவிட்டதாக தெரிகிறது. அது யாருடைய பணம் என்று தெரியவில்லை. பணம் தற்போது  SSV பள்ளி ஓட்டுனர்கள் தாஸ் மற்றும் குட்டியிடம் உள்ளது.
பணம் தொலைத்தவர்கள் தொடர்புக்கு – தாஸ்:94861 29344, குட்டி -9597194993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

News July 27, 2024

தமிழ் செய்தி வாசிப்பாளர் காலமானார்

image

புற்றுநோயால் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி பூர்வமாக கொண்ட சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார். அவருக்கு சிகிச்சையின் போது தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கம் சார்பாகவும் ரூ.5.51 லட்சம், முதலமைச்சர் ரூ.50 லட்சமும் நிதி உதவி அளித்தார்.

News July 27, 2024

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்

image

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான முழு நேர பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் கடந்த 19ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட இணைபதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்க www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

வரும் 30தேதி மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 

image

மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் வரும் 30-ம் தேதி ரிஷிவந்தியம் ஊராட்சி பெரிய கொள்ளியூர் கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி குலதீபமங்கலம் கிராமத்திலும், திருநாவலூர் ஊராட்சி திருநாவலூரிலும் , உளுந்தூர்பேட்டை ஊராட்சி நெடுமானூரிலும் , கள்ளக்குறிச்சி ஊராட்சி கரடிசித்தூரிலும் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

பாஜக பொதுக்கூட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

image

கள்ளக்குறிச்சியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடத்தப்படவுள்ளது. அதற்காக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தியாகராஜன் தலைமையில் பொதுக்கூட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அதில் மாவட்ட துணைத் தலைவர் சர்தார்சிங் , மாவட்ட செயலாளர் ஹரி, ஒன்றியத்தலைவர் சக்திவேல்,ராம்குமார், நகர தலைவர் சூர்ய மகாலட்சுமி ஆகியோரை நியமித்து பாஜக மாவட்ட தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.

News July 26, 2024

கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பி சொத்துக்கள் முடக்கம்

image

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களை வருமானவரித் துறையினர் இன்று முடக்கினார்கள். முடக்கிய சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 14.21 கோடி ஆகும். இதனால் அரசியல் சுற்று வட்டாரங்களில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News July 26, 2024

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான சேர்க்கை கலந்தாய்வு அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் தகவல்களுக்கு 9944618626, 9442867335, 9488385638 ஆகிய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News July 26, 2024

நாளை திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 26, 2024

வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி ஒரு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

error: Content is protected !!