India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்த 13 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த இளையராஜா என்பவருக்கு துணை வட்டாட்சியர் ஆக பதவி உயர்வு வழங்கியும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்தும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கி கல்வராயன் மலை வருவாய் வட்டாட்சியராக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது முடிவடைந்தும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் முதிர்வு தொகைபெற தங்களது வைப்புத்தொகை ரசீது, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிகணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் நேற்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் கள்ளசாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 67 பேர் உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் கடந்த 26 ஆம் தேதி கோமதி தலைமையில் விசாரணை மேற்கொண்டது. பின்பு நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மற்றும் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய காவலர் ஒருவர் என மொத்தம் 8 காவலர்கள் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 8 பேர் மீண்டும் மாற்று காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சின்னசேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் வேளாண்மை துறை சீரழித்து 40 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக நசுக்கியதாக தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம் அரசினர் மேல்நிலைபள்ளியில் மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா இணை சீருடை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காந்தி நகர் பகுதியில் இன்று (ஜூலை 28) பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த மணிகண்டன், சபரிநாதன், முரளி ஆகியோர் மீதும், மரவாநத்தம் சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமசாமி, அரவிந்த்ராஜ் மற்றும் மதியழகன் ஆகியோர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 92 புள்ளி தாள்கள் மற்றும் 600 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று ஜூலை 28-ம் தேதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-25 ஆண்டிற்கான காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்த நெல் (சொர்ணவாரி)1, கம்பு பெயருக்கு காப்பீடு செய்யலாம் என, கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் கூறியுள்ளார். நெல் (சொர்ணாவாரி )1 வரும் 31.07.2024 வரையிலும், கரும்பு பயிருக்கு 16.08.2024 வரை காப்பீடு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.