India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கத்தார், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் ஹரிஷ்மா, சுவேதா, ஜெரோஸ்லின், சரிகா ஸ்ரீ பங்கேற்றனர். இதில், ஹரிஷ்மா தங்கம், சுவேதா வெள்ளி, ஜெரோஸ்லின் வெள்ளி, சரிகா ஸ்ரீ வெண்கலம் வென்றனர்.
விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703474, 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். மூத்த ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான அவரது மறைவு, குடும்பத்தார் மத்தியிலும் அதிமுகவினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று இறுதி சடங்கு நடக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையதளத்தின் மூலமாக ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சின்னசேலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அவர்கள் காவல் நிலைய ஆகும்போது பரிந்துரையின் பெயரில் தொடர் சாராய வியாபாரத்தை ஈடுபட்டு வந்த ராஜா கல்லாநத்தம் வெங்கடேசன் காட்டணந்தால் ஆகிய இருவர் மீதும் ஓராண்டு கடுப்பு காவல் சட்டத்தின் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா என்ற மாணவி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று வீடு நேற்று திரும்பினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அவரது இல்லத்தில் தங்க மங்கை நட்சத்திராவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
உளுந்தூர்பேட்டை, ஆசனூர் சிட்கோ துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஆசனூர் சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எறஞ்சி, காச்சக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், ஆலத்தூர், கச்சிராப்பாளையம், வடக்கனந்தல் பகுதிகளில் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்க பகுதியில் மழை பெய்ததா?
Sorry, no posts matched your criteria.