Kallakurichi

News August 11, 2024

ஹிந்துக்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில உலக தலைவர் அலோக்குமார் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது வங்கதேச ஹிந்துக்களின் துன்பத்தை தெரிவிக்க மத்திய அரசுடன் ஒருங்கிணைத்து +91-11-26103495 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். வங்கதேசத்தில் பாதிப்படைந்த ஹிந்து மக்கள் இதன்மூலம் உதவிகளை பெறலாம் என தெரிவித்தார்.

News August 11, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யவுள்ளது

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும், குறிப்பாக 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 11, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மயானம், சாலை, மின்விளக்கு என கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. அரசம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News August 11, 2024

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.

News August 11, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வாணியந்தல், மடப்பட்டு, பாவந்தூர், பின்னல்வாடி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் தங்களுடைய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News August 11, 2024

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு
முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு
வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும்
ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு
செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

News August 10, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிக்கை

image

கள்ளக்குறிச்சி மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனைகள், மனைப்பிரிவுகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வரன்முறைப்படுத்த 30.11.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆக 16ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஏ.எல்.சி., சர்ச் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 10, 2024

சங்கராபுரம் நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நட்ட நீதிபதிகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நீதிமன்ற அன்றாட அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சௌந்தர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். இதில், சங்கராபுரம் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!