Kallakurichi

News August 13, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு ஒத்துவைப்பு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐயிடம் மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2024

கொடியேற்றுகிறார் கள்ளக்குறிச்சி ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

உளவுத்துறை எஸ்.ஐ உட்பட மூன்று பேர் பணியிட மாற்றம்

image

கள்ளக்குறிச்சி உளவுத்துறை எஸ்.ஐ பூங்குன்றம், கள்ளக்குறிச்சி உளவுத்துறை போலீஸ் சேட்டு, தியாகதுருகம் உளவுத்துறை போலீஸ் பிரபு ஆகிய மூன்று பேரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உதவி ஆய்வாளர் பூங்குன்றம் சென்னை சிறப்பு காவல் படைக்கும், போலீஸ் சேட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும், போலீஸ் பிரபு வரஞ்சரம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 12, 2024

கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி, சென்னையில் வழங்கப்படும். www.tntourismawards.com இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News August 12, 2024

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

image

அரசம்பட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பூட்டை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கிருஷ்ணன் குடித்துவிட்டு வந்து கலைச்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார். கலைச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணனை இன்று கைது செய்தனர்.

News August 12, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?

News August 12, 2024

17 ஈப்பு வாகனங்களை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 17 ஈப்பு வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று(ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்து வாகனங்களின் சாவிகளை சம்பந்தப்பட்ட ஈப்பு ஓட்டுநர்களிடம் வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 12, 2024

மகளை கொன்ற தாயின் பரபரப்பு வாக்குமூலம்

image

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், தனது மகள் அதிசயாவை காணவில்லை என 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்துவதால், துக்க வீட்டில் எப்படி பணம் கேட்பார்கள் என மகளை கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

News August 12, 2024

கள்ளக்குறிச்சியில் விடிய விடிய கனமழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சங்கராபுரம், சின்னசேலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளக்காடாக ஓடியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அவ்வபோது மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News August 11, 2024

மது ஒழிப்பு மாநாடு தேதி மாற்றம்

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெறும் என ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!