Kallakurichi

News August 17, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 17, 2024

மகளிர் உரிமைத்தொகை தொடர்பான செய்தி வதந்தி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.24, 20.08.2024 ஆகிய மூன்று தினங்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக வாட்ஸ் ஆஃபில் பரவி வரும் செய்தி வதந்தி எனவும், பொதுமக்கள் யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News August 17, 2024

திருக்கோவிலூரில் சூலாயுதம் குத்தி பஸ் உரிமையாளர் பலி

image

திருக்கோவிலூர் மேல வீதியை சேர்ந்தவர் பஸ் உரிமையாளர் துளசிதாசன்(46). இவர் கடந்த 13ஆம் தேதி அங்குள்ள கெங்கையம்மன் கோவில் சாகைவார்த்தல் திருவிழாவின் போது அருள் வந்து சூலம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சூலாயுதம் துளசிதாசனின் கழுத்தில் குத்தியதில் உயிருக்கு போராடிய நிலையில் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள +2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த மாணவர்கள் உலகளாவிய IT நிறுவனத்தில் பணியினை துவங்க பயிற்சி வழங்கப்பட உள்ளது என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News August 17, 2024

சின்னசேலத்திற்கு வரும் செல்லப்பெருந்தகை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை 23ஆம் தேதி சின்னசேலம் பகுதிக்கு வருகை தர உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News August 17, 2024

பொதுமக்கள் உடல் தானம் வழங்க முன்வர வேண்டும்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம் வழங்கிய 8 குடும்பத்தினரை ஆட்சியா் நேற்று கெளரவித்தார். பின்னர் பேசிய அவர், “முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. உடல் தானம் செய்வதன் மூலம் மருத்துவத் துறை முன்னேற்றம் அடைந்து, வருங்கால சமுதாயத்திற்கு திறமையான மருத்துவா்கள் உருவாவா். பொதுமக்கள் உடல் தானம் வழங்க முன்வர வேண்டும்” என்றாா்.

News August 16, 2024

முன்னாள் படைவீரர்களுக்கான குறை கேட்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 23ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

பசுமை நிறுவனங்கள் தொழில் கடன் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவி குழுக்கள் வாயிலாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை நிறுவனங்கள் உருவாக்கவும், ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளுக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி பெற்ற நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை

image

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்களம், கருணாபுரம், எம்.ஆர்.என்., நகர், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பளம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயல் பொறியாளர் அறிவித்துள்ளார்.

News August 16, 2024

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!