India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடமாடும் கால்நடை சேவை திட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நாளை (ஆகஸ்ட் 10), கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. மேலும், விபரங்களை 91542 50856 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மேலாளர் குமரன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்தவர ஜெஸ்பீனாமேரி. முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர் கடந்த 7ஆம் தேதி வீட்டிலிருந்து மூங்கில்துறைப்பட்டு செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. மாலை தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்தனர். குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி N. ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி S .சௌந்தர் ஆகியோர் நாளை (09.08.2024) ம் தேதி காலை 8:30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஆய்வு செய்ய வருகை தர உள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சின்னசேலம் திரு.வி.க நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் நேற்று மூங்கில் பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் அருந்துவதற்காக கடைக்கு சென்றவர் சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரில் இருசக்கர வாகனத்தில் ஜெயராமன் மீது மோதியதில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் கத்தார், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் ஹரிஷ்மா, சுவேதா, ஜெரோஸ்லின், சரிகா ஸ்ரீ பங்கேற்றனர். இதில், ஹரிஷ்மா தங்கம், சுவேதா வெள்ளி, ஜெரோஸ்லின் வெள்ளி, சரிகா ஸ்ரீ வெண்கலம் வென்றனர்.
விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703474, 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். மூத்த ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான அவரது மறைவு, குடும்பத்தார் மத்தியிலும் அதிமுகவினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று இறுதி சடங்கு நடக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையதளத்தின் மூலமாக ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.