India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் பல பகுதிகள் பாதிப்படைந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 17 ஈப்பு வாகனங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று(ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்து வாகனங்களின் சாவிகளை சம்பந்தப்பட்ட ஈப்பு ஓட்டுநர்களிடம் வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், தனது மகள் அதிசயாவை காணவில்லை என 2 நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்துவதால், துக்க வீட்டில் எப்படி பணம் கேட்பார்கள் என மகளை கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சங்கராபுரம், சின்னசேலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளக்காடாக ஓடியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அவ்வபோது மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெறும் என ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில உலக தலைவர் அலோக்குமார் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது வங்கதேச ஹிந்துக்களின் துன்பத்தை தெரிவிக்க மத்திய அரசுடன் ஒருங்கிணைத்து +91-11-26103495 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். வங்கதேசத்தில் பாதிப்படைந்த ஹிந்து மக்கள் இதன்மூலம் உதவிகளை பெறலாம் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும், குறிப்பாக 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மயானம், சாலை, மின்விளக்கு என கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. அரசம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.